எட்டு
#எட்டு_மேல_எட்டு_வச்சு கவிஞர் #சுகமதியான் மிகச் சிறந்த தமிழ் அறிஞர். தமிழின் நிகண்டை வடமொழிச் சொல் என்பாரிடத்தில் அது 'நிகழ்வு' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என நிரூபித்தவர். அதன் பொருட்டு அவர்க்கு அஞ்சியே எனது இன்னொரு தமிழ் ஆர்வலர் நண்பர் #பார்த்திபன் 'நிகண்டு' எனவெழுதாமல் 'உரிச்சொற் பனுவல்' என்றெழுதுவார் என்பது இருக்கட்டும். நல்லது. அண்மையில், சுகமதியை நேர்கண்டேன் திண்டல் அருகே (தமிழ்க்கடவுள் முருகன் குடிகொண்ட தலங்களில் திண்டலும் ஒன்று). மனிதருக்கு எண்கணித ஜோதிடப் பித்து தலைக்கேறியிருந்தது. பேச்சுக்கு பேச்சு நியூமராலஜி ஆக்ஸிஜனேற்றமாய் கார்பன்டை ஆக்ஸைடை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். நானும் எண்கணிதம் பார்ப்பவன் எனினும் அதில் உடன்பாடு இல்லாதவன் - அதிகம் நம்பாதவன். உரையாடலில் "ராஜா, எட்டாம் நம்பர் எனக்கு ஒத்துக்காதுங்க" எனக் கூற எனக்கு 'சொரேல்" என்றது. "அருந்தமிழை அள்ளிப் பருகி தமிழ்ப்பற்று கொண்டவர்தாமே நீவீர்?" "ஆமாம்.அதற்கென்ன இப்பொழுது?" "தமிழின் முதலெழுத்து அகரம்தானே. அந்த #அ எழுத்து தமிழ் எண்ணாக வருகையில் #8...