இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்ய உக்ரைன்

#உக்கிரஷ்யா உலக இலக்கிய படைப்புகளில் பொதுவுடைமைவாதிகளால் பெரிதும் மதித்து வாசிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவது #மாக்சிம்_கார்க்கி எழுதிய #தாய் . இது ரஷ்ய (தொழிலாளர் - பாட்டாளி வர்க்க) புரட்சி பற்றியது. இப்புரட்சிக்கு, நாயகன் #பாவெல் உடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இன்னொரு முக்கிய இணை நாயகன் #அந்திரேய்_நகோத்யா . இவன் #உக்ரேனியன் . ஆகக்கூடி, #தாய் நூல்வழி பார்த்தாலும் கூட ஒரு உண்மை+நல்ல அடித்தளப் புரட்சி ரஷ்ய+உக்ரைன் கூட்டமைவினால் விதைக்கப்பட்ட வரலாற்றை உணரலாம். ஆனால், இன்றோ ஏனிப்படி? #யோசிக்கிறேன்_யோசியுங்கள்_யோசிப்போம் தோழர்களே.. அன்புடன், கம்கோராஜா

சிங்கார வேலனார்

★வேலன் என்னும் தோழன்★ ***************** *செங்கொடியே செங்கதிரே செகம்புகழ் சிங்கார வேலனர் செய்திட்ட சிறப்புகளை செப்பிட வந்தேன் கேளீர் *மாசுஅறு வீரனை மாசறு செம்பொன்னை ஆசறுசீர் விருத்தத்தில்- எம்மால் அடக்கிட ஏலாது! *எழுசீர் விருத்தங்களில் எழுகதிர் வேலவனை தொழுது அடியேன் - எடுத் தெழுதவும் காணாது! *எண்திக்கும் வென்று எட்டவியலா அவர்பெருமை தம்மை எண்சீர் அகவலிட ஆகாது எனத் திக்கும் என்இந் நிலையில்.. *இந்தியப் பொதுவுடைமையின் துவக்க விதையை புதுக் கவிதையால் புதுக்க விழைந்தேன்; புதுக்க விளைந்தேன்! *பதுக்கல் என்பது தனியுடைமை- ஆனால், பாட்டாளிக் கெப்போது பொதுவுடைமை!? செதுக்க வந்தது  சிங்கார வேலனெனும் சிற்பியவரின் சிந்தனை - அதனை அறுக்க வந்த வாள்வேல்கள் எத்தனை? அவர் புகழைக் கூறிட்ட குறுமதிதான் எத்தனை? கூறிடுவேன் மனமே அவனை நினைந்தனை.. *மயிலை ஊர்தியாகக் கொண்டவன் சிங்கார வேலன்; அது கந்த புராணம். மயிலைஊர் தியாகத்தைக் காண விளைந்தவன்  சிங்கார வேலன்; இது கம்யூனிச புராணம். *நாலுவகையாம் வேதம் நாலுவருணமாம் சாதி பகுத்து வைத்து பாரதத்தில் சடுகுடு ஆடியது சனாதன தர்மம்! 'வருண மழை பொதுவாம் வாழ்வாதாரம் பாப்பானுக்...